Get me outta here!

யார் அழுவார் ??

kathalkavithai kavithai kavithaigal tamil poems
நல்லது செய்தேனோ..
கெட்டது செய்தேனோ ..
என் நலம் வாழ 
என்னென்ன செய்தேனோ??
ஞாபகம் இல்லை...
நான் இறந்தால் 
யார் அழுவார் 
தெரியவில்லை...
மனித மனம் 
புரிந்து கொள்ள 
தனியாய் ஒரு 
கலை இல்லை!!!
என் மறைவை 
நினைவில் கொள்ள... 
எனக்காய் கண்ணீர் சிந்த..
கொடுத்து விட்டேன் 
என் கண்களை 
தானமாக!!!!

ஒரு பொறியாளனின் கவிதை..

kathalkavithai kavithai kavithaigal tamil poems

கருகி இறக்கிறது 
அனுதினமும் 
என் தோட்டத்தில்
ரசிக்கப்படாத  
ஒரு ரோஜா...... 
 
விளையாட ஆளின்றி   
அழுது அழுது 
தூங்கி விடுகிறது 
என் எதிர் வீட்டில் 
ஒரு குழந்தை......
 
சொட்டு சொட்டாய்  
விழுந்து விடுகின்றன 
சாக்கடையில்
என் வீடு வந்த 
மழை துளிகள்... 
 
பாராட்டுக்கள் ஏதுமின்றி 
புதைந்து விடுகின்றன
புத்தகத்தில் 
என் தங்கை வரைந்த
ரங்கோலிகள்...... 
 
இவையேதும் அறியாமல்  
வேலை, வேட்கை என்று  
சுழண்டு கொண்டிருக்கும் 
நான் 
இறந்தும் போவேன் 
ஒரு நாள்
இறந்து விட்டேன் 
என்பது கூட தெரியாமல்!!!!

ஏக்கம்

kathalkavithai kavithai kavithaigal tamil poemsகுழந்தைகள் ஏக்கம்
பெரிதாய் வளர்ந்திட...
வளர்ந்தவர் ஏக்கம் 
குழந்தையாய் தொடர்ந்திருக்க!!!

குப்பை

kathalkavithai kavithai kavithaigal tamil poems அழுக்கு குப்பைகள் 
அவன் பையில்....
அழகான அவன் கனவுகள்
குப்பையில்!!!

விதவை

kathalkavithai kavithai kavithaigal tamil poems
சில மரணம்
விதவை...
சில மரணம்
மறு திருமணம்...

அஹிம்சை



அஹிம்சையை 
போதித்தவர் 
நேதாஜி இல்லை 
காந்திஜி என்று 
அவனை அடித்து 
திருத்தினார் ஆசிரியர்!!!!

கண்ணீர்

நேற்று இறந்த 
மலர்களுக்கு 
இன்று பிறக்கும் 
மொட்டுக்கள் 
சிந்தும் கண்ணீர்... 
பனித்துளி!!

அயோத்தி...

அகிலம் காக்க
கடவுள்...
ஆலயம் காக்க
காவலன்!!!!

மறக்க!!

உலகை மறக்க
தேவை இல்லை
காதல் வசமோ
பிராந்தி பாட்டிலோ
என்னிடம் இருக்கிறதே
சுமாரான ஒரு ஹெட் போனும்
அற்புதமான ரஹ்மான் இசையும்!!!!

என் விடை!!

கை கோர்த்து விரல் வருடிய
அந்த மாலை வேளையில்
"என்னை எவ்வளவு பிடிக்கும்??"
முதலொன்று கேட்டாய் ...
"தெரியாது" என்றேன்..
சிறிதாய் அதிர்ந்தாய்...
"சொன்னால் தெரியாது??" என்றேன்..
சிறு புன்னகை இட்டாய்...
"ஆயுளெல்லாம் அருகிலே இருப்பாயா??"
பிரிதொன்று கேட்டாய்...
"முடியாது " என்றேன்..
கொஞ்சம் கோபித்தாய்...
"உன் அருகில் இருந்தால் ஆயுள் முடியாது" என்றேன்..
செல்லமாய் சிணுங்கினாய்...
"எனக்காக உன் உயிரை தருவாயா??"
உரிமையாய் கேட்டாய்...
"இறந்தால் தானே தருவேன்", என்றேன்...
கண்ணீர் விட்டாய்
குழந்தை போல் ..
"வார்த்தை பிழையாயிற்று!!
என்னிடம் இருந்தால் தானே தருவேன்!!", என்றேன்..
கண் துடைத்து
சிரித்தாய் சிறிதாய்...
"என்னை எவ்வளவு பிடிக்கும்????"  மறுபடியும் கேட்டாய்..

உதடு பிரித்து
உதடு சேர்த்தேன்...
எழுத முடியவில்லை
கொடுத்ததை போல்
கத்சிதமாய் !!!

தெரியுமா உனக்கு??

தினம் தினம்
உன்னை தூக்குவதால்
கிறுக்கு பிடித்து
சுற்றும்
பூமியின் காதல்
தெரியுமா உனக்கு??.....

உன் கடைக்கண் பார்வை
விழாததால்
பிறரையும் சுட்டு
கடலில் விழுந்து
தற்கொலை செய்யும்
சூரியனின் காதல்
தெரியுமா உனக்கு??..........

இரவு வேளையில்
உன்னை காணாமல்
சோகத்தில் தேயும்
சந்திரனின் காதல்
தெரியுமா உனக்கு??..........

தான் தொட
முடியாமல் போனாலும்
தன் கண்நீரேனும்
உன்னை தொடட்டும் என
மழை சிந்தும்
மேகத்தின் காதல்
தெரியுமா உனக்கு??.....

உன் கண்பார்த்து
உண்மை கதைக்க
தைரியம் இல்லாமல்
மறைந்து கொண்டு
காதில் கிசுகிசுக்கும்
தென்றலின் காதல்,
கேட்குமா உனக்கு??.....

உன் மேனி முழுவதும்
பயணம் செய்ய
சேரில் சேரவும்
தயாராய் இருக்கும்
உன் குளியலறை
நீர்த்துளிகளின் காதல்
தெரியுமா உனக்கு??.....

தென்றல் அவன்
தொடாமல் தொட்ட
பாகங்கள் எல்லாம்
நீ தெரிந்தே
தொட வைப்பதால்
மோட்சத்தில் மிதக்கும்
உன் சோப்பு கட்டியின் காதல்
தெரியுமா உனக்கு??

வித விதமாய்
சொல்லிய
இத்தனை காதலும்
தெரியா உனக்கு
என்ன சொல்லி
புரிய வைப்பேன்
என் காதலை
என்ற
என் தவிப்பாவது
தெரியுமா உனக்கு??

நூலகம்

kathalkavithai kavithai kavithaigal tamil poems
எழுதியிருக்கிறதே!!!
லைப்ரரி சுவற்றில்
"பேசக் கூடாதென்று"......
பிறகு ஏன்
திறந்திருக்கிறாய் அன்பே
உன் கண்களை !!!

English Translation:
LIBRARY:
It's Written!!
On the library wall
"Please dont speak"
Then why my Dear
Have u kept
Ur eyes
Open!!!
P.S sorry if poem lost its sheen in translation.. Will update other translations soon :)

மூன்றாம் விதி

இன்று முதல்
உன்னை மனசாட்சி இன்றி
வெறுக்கிறேன்...
நியுட்டனின் மூன்றாம் விதிப்படி
நீ என்னை விரும்புவாய்
என்ற நம்பிக்கையில்!!!

கொலுசு

மந்திரம் கற்றாயோ ??
அழகு சாதனத்தை
இசை கருவி ஆக்குகிறாயே 
உன் கால்களில்
கொலுசுகள் மாட்டி !!!

தவம்

கோவத்தில் திட்டுகிறாய்

தூக்கத்தை பகிர்ந்து கொள்கிறாய்

செல்லமாக எப்போதும் சண்டையிடுகிறாய்

இருக்கமாய் கட்டி அணைக்கிறாய்

போன ஜென்மத்தில்

என்ன தவம் செய்ததோ

உன் படுக்கையறை

பொம்மை கரடி!!!



வெறுமை

எத்தனை நட்சத்திரங்கள்
மினுமினுக்கும்
வானத்தில்......
ஏனோ
மனம் ஏங்கும்
வராத
அந்த ஒரு நிலவுக்காக !!!!