கருகி இறக்கிறது
அனுதினமும்
என் தோட்டத்தில்
ரசிக்கப்படாத
ஒரு ரோஜா......
விளையாட ஆளின்றி
அழுது அழுது
தூங்கி விடுகிறது
என் எதிர் வீட்டில்
ஒரு குழந்தை......
சொட்டு சொட்டாய்
விழுந்து விடுகின்றன
சாக்கடையில்
என் வீடு வந்த
மழை துளிகள்...
பாராட்டுக்கள் ஏதுமின்றி
புதைந்து விடுகின்றன
புத்தகத்தில்
என் தங்கை வரைந்த
ரங்கோலிகள்......
இவையேதும் அறியாமல்
வேலை, வேட்கை என்று
சுழண்டு கொண்டிருக்கும்
நான்
இறந்தும் போவேன்
ஒரு நாள்
இறந்து விட்டேன்
என்பது கூட தெரியாமல்!!!!