Get me outta here!

ஒரு பொறியாளனின் கவிதை..

kathalkavithai kavithai kavithaigal tamil poems

கருகி இறக்கிறது 
அனுதினமும் 
என் தோட்டத்தில்
ரசிக்கப்படாத  
ஒரு ரோஜா...... 
 
விளையாட ஆளின்றி   
அழுது அழுது 
தூங்கி விடுகிறது 
என் எதிர் வீட்டில் 
ஒரு குழந்தை......
 
சொட்டு சொட்டாய்  
விழுந்து விடுகின்றன 
சாக்கடையில்
என் வீடு வந்த 
மழை துளிகள்... 
 
பாராட்டுக்கள் ஏதுமின்றி 
புதைந்து விடுகின்றன
புத்தகத்தில் 
என் தங்கை வரைந்த
ரங்கோலிகள்...... 
 
இவையேதும் அறியாமல்  
வேலை, வேட்கை என்று  
சுழண்டு கொண்டிருக்கும் 
நான் 
இறந்தும் போவேன் 
ஒரு நாள்
இறந்து விட்டேன் 
என்பது கூட தெரியாமல்!!!!

ஏக்கம்

kathalkavithai kavithai kavithaigal tamil poemsகுழந்தைகள் ஏக்கம்
பெரிதாய் வளர்ந்திட...
வளர்ந்தவர் ஏக்கம் 
குழந்தையாய் தொடர்ந்திருக்க!!!

குப்பை

kathalkavithai kavithai kavithaigal tamil poems அழுக்கு குப்பைகள் 
அவன் பையில்....
அழகான அவன் கனவுகள்
குப்பையில்!!!

விதவை

kathalkavithai kavithai kavithaigal tamil poems
சில மரணம்
விதவை...
சில மரணம்
மறு திருமணம்...

அஹிம்சை



அஹிம்சையை 
போதித்தவர் 
நேதாஜி இல்லை 
காந்திஜி என்று 
அவனை அடித்து 
திருத்தினார் ஆசிரியர்!!!!

கண்ணீர்

நேற்று இறந்த 
மலர்களுக்கு 
இன்று பிறக்கும் 
மொட்டுக்கள் 
சிந்தும் கண்ணீர்... 
பனித்துளி!!

அயோத்தி...

அகிலம் காக்க
கடவுள்...
ஆலயம் காக்க
காவலன்!!!!