Get me outta here!

மறக்க!!

உலகை மறக்க
தேவை இல்லை
காதல் வசமோ
பிராந்தி பாட்டிலோ
என்னிடம் இருக்கிறதே
சுமாரான ஒரு ஹெட் போனும்
அற்புதமான ரஹ்மான் இசையும்!!!!

என் விடை!!

கை கோர்த்து விரல் வருடிய
அந்த மாலை வேளையில்
"என்னை எவ்வளவு பிடிக்கும்??"
முதலொன்று கேட்டாய் ...
"தெரியாது" என்றேன்..
சிறிதாய் அதிர்ந்தாய்...
"சொன்னால் தெரியாது??" என்றேன்..
சிறு புன்னகை இட்டாய்...
"ஆயுளெல்லாம் அருகிலே இருப்பாயா??"
பிரிதொன்று கேட்டாய்...
"முடியாது " என்றேன்..
கொஞ்சம் கோபித்தாய்...
"உன் அருகில் இருந்தால் ஆயுள் முடியாது" என்றேன்..
செல்லமாய் சிணுங்கினாய்...
"எனக்காக உன் உயிரை தருவாயா??"
உரிமையாய் கேட்டாய்...
"இறந்தால் தானே தருவேன்", என்றேன்...
கண்ணீர் விட்டாய்
குழந்தை போல் ..
"வார்த்தை பிழையாயிற்று!!
என்னிடம் இருந்தால் தானே தருவேன்!!", என்றேன்..
கண் துடைத்து
சிரித்தாய் சிறிதாய்...
"என்னை எவ்வளவு பிடிக்கும்????"  மறுபடியும் கேட்டாய்..

உதடு பிரித்து
உதடு சேர்த்தேன்...
எழுத முடியவில்லை
கொடுத்ததை போல்
கத்சிதமாய் !!!

தெரியுமா உனக்கு??

தினம் தினம்
உன்னை தூக்குவதால்
கிறுக்கு பிடித்து
சுற்றும்
பூமியின் காதல்
தெரியுமா உனக்கு??.....

உன் கடைக்கண் பார்வை
விழாததால்
பிறரையும் சுட்டு
கடலில் விழுந்து
தற்கொலை செய்யும்
சூரியனின் காதல்
தெரியுமா உனக்கு??..........

இரவு வேளையில்
உன்னை காணாமல்
சோகத்தில் தேயும்
சந்திரனின் காதல்
தெரியுமா உனக்கு??..........

தான் தொட
முடியாமல் போனாலும்
தன் கண்நீரேனும்
உன்னை தொடட்டும் என
மழை சிந்தும்
மேகத்தின் காதல்
தெரியுமா உனக்கு??.....

உன் கண்பார்த்து
உண்மை கதைக்க
தைரியம் இல்லாமல்
மறைந்து கொண்டு
காதில் கிசுகிசுக்கும்
தென்றலின் காதல்,
கேட்குமா உனக்கு??.....

உன் மேனி முழுவதும்
பயணம் செய்ய
சேரில் சேரவும்
தயாராய் இருக்கும்
உன் குளியலறை
நீர்த்துளிகளின் காதல்
தெரியுமா உனக்கு??.....

தென்றல் அவன்
தொடாமல் தொட்ட
பாகங்கள் எல்லாம்
நீ தெரிந்தே
தொட வைப்பதால்
மோட்சத்தில் மிதக்கும்
உன் சோப்பு கட்டியின் காதல்
தெரியுமா உனக்கு??

வித விதமாய்
சொல்லிய
இத்தனை காதலும்
தெரியா உனக்கு
என்ன சொல்லி
புரிய வைப்பேன்
என் காதலை
என்ற
என் தவிப்பாவது
தெரியுமா உனக்கு??

நூலகம்

kathalkavithai kavithai kavithaigal tamil poems
எழுதியிருக்கிறதே!!!
லைப்ரரி சுவற்றில்
"பேசக் கூடாதென்று"......
பிறகு ஏன்
திறந்திருக்கிறாய் அன்பே
உன் கண்களை !!!

English Translation:
LIBRARY:
It's Written!!
On the library wall
"Please dont speak"
Then why my Dear
Have u kept
Ur eyes
Open!!!
P.S sorry if poem lost its sheen in translation.. Will update other translations soon :)