உலகை மறக்க
தேவை இல்லை
காதல் வசமோ
பிராந்தி பாட்டிலோ
என்னிடம் இருக்கிறதே
சுமாரான ஒரு ஹெட் போனும்
அற்புதமான ரஹ்மான் இசையும்!...
என் விடை!!
Posted by Kiran Jayachandran on 4:11 PM with 6 comments
கை கோர்த்து விரல் வருடிய
அந்த மாலை வேளையில்
"என்னை எவ்வளவு பிடிக்கும்??"
முதலொன்று கேட்டாய் ...
"தெரியாது" என்றேன்..
சிறிதாய் அதிர்ந்தாய்...
"சொன்னால் தெரியாது??" என்றேன்..
சிறு புன்னகை இட்டாய்...
"ஆயுளெல்லாம் அருகிலே இருப்பாயா??"
பிரிதொன்று கேட்டாய்...
"முடியாது " என்றேன்..
கொஞ்சம் கோபித்தாய்...
"உன் அருகில் இருந்தால் ஆயுள் முடியாது" என்றேன்..
செல்லமாய் சிணுங்கினாய்...
"எனக்காக உன் உயிரை தருவாயா??"
உரிமையாய் கேட்டாய்...
"இறந்தால் தானே தருவேன்",...
Posted in காதல்
தெரியுமா உனக்கு??
Posted by Kiran Jayachandran on 3:20 PM with 3 comments
தினம் தினம்
உன்னை தூக்குவதால்
கிறுக்கு பிடித்து
சுற்றும்
பூமியின் காதல்
தெரியுமா உனக்கு??.....
உன் கடைக்கண் பார்வை
விழாததால்
பிறரையும் சுட்டு
கடலில் விழுந்து
தற்கொலை செய்யும்
சூரியனின் காதல்
தெரியுமா உனக்கு??..........
இரவு வேளையில்
உன்னை காணாமல்
சோகத்தில் தேயும்
சந்திரனின் காதல்
தெரியுமா உனக்கு??..........
தான் தொட
முடியாமல் போனாலும்
தன் கண்நீரேனும்
உன்னை தொடட்டும் என
மழை சிந்தும்
மேகத்தின் காதல்
தெரியுமா உனக்கு??.....
...
Posted in காதல்
நூலகம்
Posted by Kiran Jayachandran on 5:06 PM with 2 comments

எழுதியிருக்கிறதே!!!
லைப்ரரி சுவற்றில்
"பேசக் கூடாதென்று"......
பிறகு ஏன்
திறந்திருக்கிறாய் அன்பே
உன் கண்களை !!!
English Translation:
LIBRARY:
It's Written!!
On the library wall
"Please dont speak"
Then why my Dear
Have u kept
Ur eyes
Open!!!
P.S sorry if poem lost its sheen in translation.. Will update other translations soon ...
Posted in லைப்ரரி
Subscribe to:
Posts (Atom)